பூரி என்றாலே அனைவருக்குமே பிடித்த உணவுதான். சாதாரணமாக கோதுமை மாவில் பூரி செய்வோம். இடையே மாறுதலுக்கு மைதாமாவில் பூரி செய்து கொள்ளலாம்.
சுவையும் வித்தியாசமாக இருக்கும். மைதாப்பூரி கோதுமைப் பூரி போன்று மெதுமையாக இருப்பது குறைவு. மெதுமையாக வருவதற்கு மைதாவுடன் தேங்காய்ப்பால் கலந்து குழைத்து வைத்துப் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும். பொரிக்கும்போது பொங்கியும் வரும்.
இத்துடன் வழமையாகச் செய்வதுபோல உருளைக்கிழங்கு குருமா செய்து கொள்ளலாம். அல்லது சற்று வித்தியாசமாக நார்ப்பொருட்கள் சேர்ந்த பீன்ஸ், கரட், முட்டைக்கோஸ் அல்லது லீக்ஸ் கலந்த கறியாக செய்து கொள்வது மைதாவில் உள்ள காபோஹைரேட்டை சமன் செய்வதாக இருக்கும்.
கறி தயாரிக்க
பீன்ஸ் - 100 கிராம்
கரட் - 1
உருளைக் கிழங்கு – 1
முட்டைக்கோஸ் அல்லது லீக்ஸ் - 150கிராம்
தக்காளி – 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பொடி வகை
மிளகாய்ப் பொடி ½ ரீ ஸ்பூன்
தனியாப் பொடி - ½ ரீ ஸ்பூன்
மசாலாப்பொடி – ¼ ரீ ஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப
கட்டிப்பால் சிறிதளவு (விரும்பினால்)
தாளிக்க
எண்ணெய் - 1டேபிள் ஸ்பூன்
கடுகு, கறிவேற்பிலை, மல்லித்தழை சிறிதளவு
செய்முறை
பீன்ஸ, கரட், உருளைக் கிழங்கு, முட்டைக்கோஸ் அல்லது லீக்ஸ், தக்காளி, வெங்காயம்,
பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிதாக வெட்டி வையுங்கள்.
ஓயிலில் கடுகு, கறிவேற்பிலை வெங்காயம் தாளித்து தக்காளியைப் போட்டு வதங்க விடுங்கள். வதங்கியதும் ஏனைய மரக்கறிகளைப் போட்டு சற்று வதக்கி உப்பு போட்டு மூடிவிடுங்கள்.
ஓரிரு நிமிடத்தில் பிரட்டி மிளகாய்ப்பொடி, தனியா, மசாலாப் பொடி கலந்து இத்துடன் வேக வைக்க சிறிதளவு தண்ணீர் விட்டு மூடிவிடுங்கள்.
இரண்டு மூன்று நிமிடத்தில் திறந்து பிரட்டி தேங்காய்ப்பால் விட்டு, கிளறி மல்லித் தழை போட்டு இறக்குங்கள்.
மைதாப் பூரிக்கு
மைதா மா – 1 கப்
தேங்காய்ப்பால் - 4 டேபிள் ஸ்பூன்
மார்ஜரீன் - ½ ரீ ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
பொரிப்பதற்கு எண்ணெய்
மைதாவுடன் மார்ஜரீன் உப்பு கலந்து கிளறி தேங்காய்ப்பால் விட்டு குழையுங்கள். இத்துடன் தேவையான அளவு தண்ணீரை விட்டு குழைத்து பூரி மாவைத் தயாரித்து எடுங்கள்.
பொரிப்பதற்கு 6-7 மணித்தியாலம் முன்பு குழைத்து வைப்பது நன்று.
பொரிக்கு முன் சிறுசிறு உருண்டைகளாக மாவை உருட்டி வைத்து, போர்ட்டில் மா தூவி சிறிய வட்டங்களாக மெல்லியதாக உருட்டிக் கொள்ளுங்கள்.
எண்ணெய் நன்கு கொதிக்க, அதில் மெதுவாகப் போடுங்கள் (அவசரப்பட்டுப் போட்டால் சொல்லவே தேவையில்லை. எண்ணெய் தெறித்து நடப்பதே வேறாகிவிடும்). உப்பி வர மறுபுறம் திருப்பிப் போட்டு எடுங்கள்.
எண்ணெயை வடியவிட்டு எடுங்கள்.
ஆகா! மைதாப் பூரி தயார். சுடச்சுட சாப்பிட வாருங்கள்.
----- மாதேவி -------
Wednesday, March 25, 2009
Wednesday, March 18, 2009
குடமிளகாய் சலட்
கப்ஸிகம் என அழைக்கப்படும் இது மிளகாய் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் விட்டமின் சி அடங்கியுள்ளது. விட்டமின் ஏ யைக் கொடுக்கும் கரோட்டினும் அதிகம் உண்டு.
பொதுவாக மிளகாய் இனத்தில் காரவகை, காரம் குறைந்த ஸ்வீட் பெப்பர் என இவற்றின் சுவை இருக்கும். பெப்பர் கோர்ன், பெல் பெப்பர், பவ்ரிகா பெப்பர், மெக்ஸிகன் பெப்பர், ரெட் பெப்பர், சில்லி பெப்பர், என இன்னும் பல வகையில் கிடைக்கின்றன.
இவை உணவில் காரத்திற்காகவும், வாசனைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் உணவு செமிபாட்டிற்கு உதவக் கூடியது.
குடமிளகாய் பச்சையாகவே உண்ணக் கூடியது. ஏனைய உணவுகளுடன் கலந்தும் சமைத்துக் கொள்ளலாம்.
இன்று நிரப்பல் கொண்டு தயாரிக்கப்பட்ட குடமிளகாய் சலட் செய்து கொள்வோம். இங்கு பச்சைநிற குடமிளகாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. விருந்துகளின் போது அனைவரின் கண்ணையும் கவர்வதற்கு பல வர்ணங்கiளைக் கொண்ட குடமிளகாய்களைப் பயன்படுத்தலாம்.
குடமிளகாய் நிரப்பலுக்கு
சிவப்பு குடமிளகாய் - 1
பச்சை குடமிளகாய் - 1
மஞ்சள் குடமிளகாய் - 1
விரும்பிய அரைத்த இறைச்சி – ½ கப்
விரும்பிய மீன், இறால் அல்லது நண்டு – ½ கப்
முட்டை – 2
வெங்காயம் - ½
மிளகாய்த் தூள் - ¼ ரீ ஸ்பூன்
சீரகத்தூள்- சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேசிச்சாறு – சில துளிகள்
உப்பு- தேவைக்கேற்ப
சீஸ் துருவல் அல்லது பிரஸ் கிறீம் -
செய்து பாருங்கள்
இறைச்சி, உப்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் கலந்து அவித்தெடுத்து வையுங்கள். (அல்லது சற்று ஓயிலில் வெங்காயம், பூண்டு தாளித்து இறைச்சியைச் சேர்த்துப் பிரட்டி உப்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டு, சற்று வேக இறக்கும்போது ஒருரீஸ்பூன் டொமாடோ சோஸ் விட்டு எடுத்து வையுங்கள்.)
மீனை உப்பு, மஞ்சள் தூள், கலந்து சற்று நீர்விட்டு அவித்தெடுத்து முள் நீக்கி உதிர்த்து, வெங்காயம், மிளகு தூள், சீரகத் தூள், தேசிச்சாறு கலந்து எடுத்து வையுங்கள்.
முட்டையை அவித்து எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி சீஸ் துருவல், மிளகு தூள், உப்பு, விரும்பினால் கடுகு பேஸ்ட் கலந்து எடுத்து வையுங்கள்.
குடமிளகாயை எடுத்து மேலே காம்புடன் மூடி போன்று வெட்டி எடுத்து வையுங்கள். சலட்களை எடுத்து குடமிளகாயுள் தனித்தனியே நிரப்பி மேலே சீஸ் துருவல் தூவி விடுங்கள். அல்லது பிரஸ் கிரீம் போட்டு வெட்டிய மூடிக் காம்பை மேலே வைத்து விடுங்கள்.
மூவகை சலட்டையும் நீங்கள் விரும்பினால் லேயெஸ் (layers)ஆகவும் ஒரு குடமிளகாயினுள் போட்டு நிரப்பிக் கொள்ளலாம்.
மாமிசம் தவிர்த்து உண்பவர்கள் தக்காளி, கரட், வெங்காயம், வெள்ளரிக்காய், அவித்த கிழங்கு, சோயா பயன்படுத்தி நிரப்பிக் கொள்ளலாம்.
பிளேட்டை எடுத்து வட்டமாக வெட்டிய வெங்காயம், தக்காளியை வைத்து அதன்மேல் நிரப்பிய குடமிளகாய்களை வைத்து கண்ணைக் கவரப் பரிமாறுங்கள்.
மாதேவி
பொதுவாக மிளகாய் இனத்தில் காரவகை, காரம் குறைந்த ஸ்வீட் பெப்பர் என இவற்றின் சுவை இருக்கும். பெப்பர் கோர்ன், பெல் பெப்பர், பவ்ரிகா பெப்பர், மெக்ஸிகன் பெப்பர், ரெட் பெப்பர், சில்லி பெப்பர், என இன்னும் பல வகையில் கிடைக்கின்றன.
இவை உணவில் காரத்திற்காகவும், வாசனைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் உணவு செமிபாட்டிற்கு உதவக் கூடியது.
குடமிளகாய் பச்சையாகவே உண்ணக் கூடியது. ஏனைய உணவுகளுடன் கலந்தும் சமைத்துக் கொள்ளலாம்.
இன்று நிரப்பல் கொண்டு தயாரிக்கப்பட்ட குடமிளகாய் சலட் செய்து கொள்வோம். இங்கு பச்சைநிற குடமிளகாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. விருந்துகளின் போது அனைவரின் கண்ணையும் கவர்வதற்கு பல வர்ணங்கiளைக் கொண்ட குடமிளகாய்களைப் பயன்படுத்தலாம்.
குடமிளகாய் நிரப்பலுக்கு
சிவப்பு குடமிளகாய் - 1
பச்சை குடமிளகாய் - 1
மஞ்சள் குடமிளகாய் - 1
விரும்பிய அரைத்த இறைச்சி – ½ கப்
விரும்பிய மீன், இறால் அல்லது நண்டு – ½ கப்
முட்டை – 2
வெங்காயம் - ½
மிளகாய்த் தூள் - ¼ ரீ ஸ்பூன்
சீரகத்தூள்- சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேசிச்சாறு – சில துளிகள்
உப்பு- தேவைக்கேற்ப
சீஸ் துருவல் அல்லது பிரஸ் கிறீம் -
செய்து பாருங்கள்
இறைச்சி, உப்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் கலந்து அவித்தெடுத்து வையுங்கள். (அல்லது சற்று ஓயிலில் வெங்காயம், பூண்டு தாளித்து இறைச்சியைச் சேர்த்துப் பிரட்டி உப்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டு, சற்று வேக இறக்கும்போது ஒருரீஸ்பூன் டொமாடோ சோஸ் விட்டு எடுத்து வையுங்கள்.)
மீனை உப்பு, மஞ்சள் தூள், கலந்து சற்று நீர்விட்டு அவித்தெடுத்து முள் நீக்கி உதிர்த்து, வெங்காயம், மிளகு தூள், சீரகத் தூள், தேசிச்சாறு கலந்து எடுத்து வையுங்கள்.
முட்டையை அவித்து எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி சீஸ் துருவல், மிளகு தூள், உப்பு, விரும்பினால் கடுகு பேஸ்ட் கலந்து எடுத்து வையுங்கள்.
குடமிளகாயை எடுத்து மேலே காம்புடன் மூடி போன்று வெட்டி எடுத்து வையுங்கள். சலட்களை எடுத்து குடமிளகாயுள் தனித்தனியே நிரப்பி மேலே சீஸ் துருவல் தூவி விடுங்கள். அல்லது பிரஸ் கிரீம் போட்டு வெட்டிய மூடிக் காம்பை மேலே வைத்து விடுங்கள்.
மூவகை சலட்டையும் நீங்கள் விரும்பினால் லேயெஸ் (layers)ஆகவும் ஒரு குடமிளகாயினுள் போட்டு நிரப்பிக் கொள்ளலாம்.
மாமிசம் தவிர்த்து உண்பவர்கள் தக்காளி, கரட், வெங்காயம், வெள்ளரிக்காய், அவித்த கிழங்கு, சோயா பயன்படுத்தி நிரப்பிக் கொள்ளலாம்.
பிளேட்டை எடுத்து வட்டமாக வெட்டிய வெங்காயம், தக்காளியை வைத்து அதன்மேல் நிரப்பிய குடமிளகாய்களை வைத்து கண்ணைக் கவரப் பரிமாறுங்கள்.
மாதேவி
Thursday, March 12, 2009
பயன் தரும் பழங்கள் 2
நாங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவு எமது உடலில் போஷாக்கு சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உடல் நலத்திற்கு அவசியமான சத்துள்ள உணவுகளை, அதுவும் அளவோடு உண்டு வருவது நோய்கள் ஏற்படாதவாறு தடுக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
சமைத்த உணவை விட வேக வைக்காத பச்சைக் காய்கறிகள், பழவகைகள், கீரைவகைகள் உண்பதால் விற்றமின்கள், கனியங்கள், சேதமுறாது முழுமையாகக் கிடைக்கும். பலவித நோய் தாக்கத்திலிருந்து எமது உடலைப் பேண இது உதவும். ஆனால் பலவகை புரதங்களையும், மாப்பொருட்களையும் சமைப்பதால் மட்டுமே முழுமையாக சீரணமடையச் செய்யலாம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
எமது உடலாரோக்கியத்திற்கு அன்றாடம் மூன்று சர்விங் பழவகைகள் எடுத்துக் கொள்ளல் நன்று என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பழங்கள் கெடாமல் நீண்டகாலம் இருக்கவும், பளபளப்பான கவர்ச்சித் தோற்றத்திற்குமாக வக்ஸ் மற்றும் இராசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள். இவை உடலுக்கு கெடுதியாகும். எனவே நீண்ட காலம் பாதுகாக்கப்பட்ட பழங்களைத் தவிர்த்து, அந்தந்த சீசனில் இலகுவாக கிடைக்கும் பழங்களை உண்டு எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போம்.
திராட்சை
100 கிராம் பழத்தில் கலோரி 32, புரதம் 0.7, விற்றமின் சீ 31 மிகி கிடைக்கும். ஒரு கப் திராட்சை உட்கொண்டால் 1 கிராம் நார்ப்பொருள் கிடைக்கும்.
பதப்படுத்தப்பட்டு வைனாகவும், வற்றலாகவும் கிடைக்கிறது. இதை அலங்காரப் பொருளாகவும், சூப், ரசம், சாதம், உப்புமா, புரியாணி, தயிரச்சாதம், சலட், அவல் என்பவற்றில் கலந்து கொள்ளலாம்.
அப்பிள்
நாளொன்றுக்கு ஒரு அப்பிள் உண்டால் வைத்தியரிடம் போக வேண்டாம் என்பது யாவரும் அறிந்ததே. இருந்தும் இதைவிட பேரீச்சை, விளாம்பழத்தில் கலோரி அதிகம் உண்டு.
பச்சை அப்பிள் சமையலில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
100 கிராம் பழத்தில் கலோரி 58, புரதம் 0.3, விற்றமின் சீ 5மிகி உண்டு. ஒரு நடுத்தர அப்பிளில் 4 கிராம் நாரப்பொருள் உண்டு. விட்டமின் நு 66 ஐரு உண்டு
குருமா, சாதம், சலட், கேக், புடிங், செய்து கொள்ளலாம். கோடியல் பழக்கலவையாகவும் கிடைக்கும்.
பேரீச்சம் பழம்
100 கிராம் பழத்தில் கலோர் 317, புரதம் 2.5, விட்டமின் சீ 3மிகி, உடையது.
இனிப்பு கூடியதாகையால் நீரழிவு நோயாளர்கள் அதிகம் உண்பது தவிர்த்துக் கொள்வது நல்லது. மிகுந்த சத்துக் கூடியது என்பதால் நோன்பு, விரத காலங்களில் விசேடமாக உண்பர்.
கேக், புடிங், லட்டு, சுவீட், கீர், சட்னி, எனப் பலவாறாக மாற்றமடையும்.
கொய்யாப்பழம்
சாதம், குருமா, சலட், செய்து கொள்ளலாம்.
100 கிராம் பழத்தில் கலோரி 51, புரதம் 0.9, விட்டமின் சீ 212 மிகி உண்டு
பஸன் பழம்
100 கிராம் பழத்தில் கலோரி 37, புரதம் 1.2, விட்டமின் சீ 13 மிகி கிடைக்கும்.
கோடியல், ரின்பூட் ஆகவும் கிடைக்கிறது. குழம்பு, ரசம், சலட், குருமா, எனப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாதுளை
100 கிராம் பழத்தில் கலோரி 66, புரதம் 0.6, விட்டமின் சீ 8 மிகி உள்ளது.
மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. இரத்த ஓட்டத்தை விருத்தி செய்யும் எனக் கூறுவர். மாதுளை 'சிரப்' பிரசித்தி பெற்றது.
அவல், தயிர், தயிர்ச்சாதம், ரசம், சலட், டெசேர்ட், சாதம், என்பவற்றில் கலந்து கொள்ளலாம்.
நெல்லி
100 கிராம் பழத்தில் கலோரி 58, புரதம் 0.5, விட்டமின் சீ 600 மிகி கிடைக்கும்.
பனம்பழம்
கிடைக்கும் காலத்தில் நேரடியாக உண்பர்.
பதப்படுத்தப்பட்டு ஜாம், களி, கோடியல், தயாரிக்கப்படுகிறது. வெய்யிலில் உலர்த்தி பனாட்டாக செய்து கொள்ளலாம்.
பனங்காய்ப் பணியாரம் பிரசித்து பெற்றது
100 கிராம் பழத்தில் கலோரி 87, புரதம் 0.7, விட்டமின் சீ 4 மிகி,
விளாம்பழம்
100 கிராம் பழத்தில் கலோரி 134, புரதம் 7.9, விட்டமின் சீ 3 மிகி உள்ளது
சமையலில் சட்னி, பச்சடி, சலட், குருமா, செய்து கொள்ளலாம். ஜாம், கோடியல், ரின்பூட் ஆகவும் கிடைக்கிறது.
தக்காளி
ஒரு நடுத்தர அளவு தக்காளியில் 1.05 புரதம், விட்டமின் சீ 25, மற்றும் 1.35 நார்ப்பொருள் உண்டு. விட்டமின் A 2364 IU, போலேட் 46 mcg உள்ளது.
கரும் சிவப்பு தக்காளியில் புற்றுநோய், இதய நோய்களை தடுக்கும் ஆற்றல் உண்டு என எலியை வைத்து செய்த ஆய்வில் கண்டுபிடித்துளார்கள்.
இது இல்லாத இலங்கை இந்திய சமையலே பெரும்பாலும் இருக்காது. சகல சமையல்களிலும் பெரும் பங்கு வகிக்கும்.
வோட்டர் மெலன் (தர்ப்பூசனி, வத்தகப் பழம்)
நீர்த்தன்மை அதிகம் உள்ளதால் வெப்பத்தைத் தணிக்கும்.
நடுத்தர அளவுத் துண்டில் 1கிராம் புரதம், 1 கிராம் நார்ப்பொருள் உண்டு. விட்டமின் A 1050 IU, போலேட(Folate) 6.6 மைக்கிரோ கிராம் (mcg) உள்ளது.
போலேட் உள்ள பழங்கள் கர்ப்பிணிகளுக்கும், கர்ப்பம் தங்கும் காலத்தில் உள்ள பெண்களுக்கும் மிகவும் நல்லது.
அவகாடோ
ஒரு நடுத்தர அளவுப் பழத்தில்; 4கிராம் புரதம், 10 கிராம் நாரப்பொருள் உண்டு. 124 மைக்கிரோ கிராம் போலேட் உள்ளது.
இவற்றைவிட கிராமங்களில் நாவல்பழம், இலந்தைப்பழம், சீத்தாப் பழம், ஈச்சம் பழம், சீமை மகிளம் பழம், வில்வம் பழம், காடுகளில் இருந்து காரை, சூரை, பாலை ஆகியனவும் கிடைக்கும்.
ஜம்பு, வெரளு, ரம்புட்டான், மங்குஸ்தான், உக்கிரஸ, பெலிங், பியர்ஸ் போன்ற பல வகைப் பழங்கள் தென்னிலங்கையில் கிடைக்கும்.
மேலைத்தேச பழவகைகள் ஸ்டோபெரி, ரோஸ்பெரி, பிளம்ஸ், ஜெயன்ட் புருட், அப்பரிகொட் போன்ற பலவும் கிடைக்கும்.
---------மாதேவி
Subscribe to:
Posts (Atom)