Wednesday, October 15, 2008

பொட்டுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்


கத்தரி
வெள்ளையாக
மாறுமா?
மாறும்!
வெள்ளையாக மட்டுமென்ன
செம்மையாக, மஞ்சளாக .. இன்னும் இன்னும்

கத்தரி வாழையுடன் கூட்டிணைந்து
தேங்காய்ப் பாலில் முக்குளித்து,
தேசியுடன் கலக்கும் போது
வாசனை கமழும், வாயூறும்

அக்கம் பக்கமும்
பொட்டுக்குள்ளால்
எட்டிப் பாரக்கும்.

ஊர்க் கத்தரியானால்
ஊரே கூடும்.

சுவைப்போமா?

தேங்காய்ப் பால் கத்தரி

தேவையான பொருட்கள்

1. பிஞ்சுக் கத்தரிக்காய் - 2
2. வாழைக்காய் - 1
3. சின்ன வெங்காயம் - 5,6
4. பச்சை மிளகாய் - 2
5. வெந்தயம் - ½ ரீ ஸ்பூன்
6. தேங்காய்த் துருவல் - ½ கப்
7. மஞ்சள் தூள் விரும்பினால்
8. தேசிப்பழம் - ½
9. கறிவேற்பிலை – 1 இலை
10. உப்பு தேவையான அளவு

தாளிக்க

1. சின்ன வெங்காயம் - 3,4
2. தாளிதக் கலவை - 1 ரீ ஸ்பூன் (கடுகு, உழுத்தம் பருப்பு, சீரகம், சோம்பு,)
3. கறிவேற்பிலை – 1 இலை
4. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

1 ம் கெட்டிப் பாலை எடுத்து தனியே வைத்துவிடுங்கள். 2ம், 3ம் பாலை ஒரு கோப்பையில் விட்டுக் கொள்ளுங்கள்.

கத்தரிக்காயை முழுதாகக் கழுவி எடுத்து தண்ணீரில் சின்னவிரலளவு நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

வாழைக்காயின் தோலை உட் தோலுடன் சீவிக் கழிக்கவும், காயை தண்ணீரில் கத்தரியைப் போல வெட்டிக் கொள்ளுங்கள்.

வெங்காயம் மிளகாயை தனித்தனியே நீளமாக வெட்டிக் வையுங்கள்.
அடுப்பில் வைக்கும் பாத்திரத்தை எடுத்து 2ம், 3ம் பாலை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

காய்கறிகளை 2-3 தண்ணீரில் கழுவிக் கொண்டு பாத்திரத்தில் போடுங்கள். பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, மஞ்சள், வெந்தயம் சேர்த்து இறுக்கமான மூடி போட்டு 5-7 நிமிடம் அவிய விடுங்கள்.

திறந்து பிரட்டிவிடுங்கள். மீண்டும் மூடி போட்டு 2 நிமிடம் அவியவிட்டு எடுத்து கிளறி, தண்ணிப்பால் வற்ற, 1ம் பாலை ஊற்றி 1 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, எலுமிச்சம் சாறு சேர்த்துவிடுங்கள்.

எண்ணெயில் தாளித்துக் கொட்டி கிளறிவிடுங்கள்.
தேங்காய்ப்பால் மணத்துடன் குழந்தைகளும் விரும்பி உண்ணும் கறியாகிவிடும்.

குறிப்பு

வாழைக்காய்க்குப் பதில் உருளைக்கிழங்கு, பலாக்கொட்டை கலந்து கொள்ளலாம்.

அசைவம் உண்போர் கருவாடு சேர்த்துக் கொண்டால் சுவை தரும்.

-: மாதேவி :-

Tuesday, October 7, 2008

வெஜிட்டபிள் அன்ட் புருட் சலட்


சலட் என்ற பெயரைக் கேட்டாலே அநேகம் பேருக்கு பசி கெட்டுவிடும். செமியாது, சாப்பிடுவதற்கு அலர்ஜி என்றெல்லாம் சாட்டுச் சொல்லுவார்கள். இதை எப்படித்தான் மேலைத் தேசத்தவர்கள் சாப்பிடுகிறார்களோ என்ற கேள்வியும் கேட்பார்கள்.

உடலுக்கு வேண்டிய சத்துக்கள் பலவும் அதில் அடங்கியுள்ளதை அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். எங்களில் பலர் இப்பொழுது சிலகாலமாகத்தான் உண்ண முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். உப்பு, காரம், புளிப்பு அதிகம் சேர்த்து, சப்புக்கொட்டி உண்ணும் ஆசிய நாட்டவரக்ளுக்கு இது சுவையற்றதாக, சாப்பிடச் சிரமமாக இருக்கலாம். எங்கள் ருசிக்கு ஏற்ப உப்பு, காரம் சற்றுச் சேர்த்து தயாரித்துக் கொண்டால் சாப்பிடப் பழகிவிடும்.

உடற்பருமன் உடையவர்கள் உடல் எடையைக் குறைக்கவும் ஏனையோர் அழகாகவும், சருமம் பளபளப்பாகவும், ஹெல்தியாகவும் இருக்க சலட் கைகொடுக்கும். கொலஸ்டரோல், நீரிழிவு, பிரஸர் நோயுள்ளவர்கள் தினமும் ஒருவகை சலட் சாப்பிடுவது நல்லது. இது அவர்கள் உடல் நலத்தைப் பேண உதவும்.

ஏன் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவருக்குமே உகந்தது. விட்டமின், கனிமங்கள், நார்ப்பொருள் நிறைந்தது. கலோரி அளவு மிகக் குறைவு என்பதால்தான் மேற்கூறிய நோயாளர்களுக்கு உகந்தது. மாமிச உணவை மட்டும் உண்பவர்களுக்கு அத்தியாவசியமானது. மலச்சிக்கலையும் நீக்கும்.

சலட் தயாரிப்பு முறைகளில் சில மாற்றங்கள் செய்து தயாரித்துக் கொண்டால் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக அமையும். சிறுவர்களையும் கவரும் விதத்தில் தயார்த்துக் கொள்ளலாம்.

இது வெஜிட்டபிள்ஸ், புருட்ஸ் இரண்டும் சேர்ந்த சலட். இரண்டும் சேர்வதால் வெஜிட்டபிள் தனியே சாப்பிட விரும்பாதவர்களும் விரும்பி உண்பார்கள்.


வெஜிட்டபிள் அன்ட் புருட் சலட்

தேவையான பொருட்கள்

1. உருளைக்கிழங்கு – 1
2. கரட் - 1
3. வெள்ளரி – 1
4. தக்காளி -1
5. விதையில்லாத பச்சைத் திராட்சைப்பழம் - 10
6. விதையில்லாத சிவத்த திராட்சைப்பழம் - 10
7. பைன் அப்பிள் ¼ துண்டு
8. சிறிய சிவத்த அப்பிள் - 1
9. சிறிய பச்சை அப்பிள் - 1
10. ஆரேன்ஜ் - 1 (விரும்பினால்)
11. லெட்டியுஸ் - 6 இலைகள்
12. பிரஸ் கிறீம் - 2 டேபிள் ஸ்பூன்
13. உப்பு சிறிதளவு
14. பெப்பர் சிறிதளவு

தயாரித்தல்

உருளைக்கிழங்கு கரட்டை சிறு துண்டுகளாக வெட்டி நீராவியில் அவித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளரி, தக்காளி சிறு துண்டுகளாக, அப்பிள் தோலுடன் வெட்டிக் கொள்ளுங்கள். திராட்சையை வெட்டாமல் அப்படியே எடுங்கள். ஆரேன்ஜ்யை தோல் நீக்கி, சுளைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

உப்பு நீரில் கழுவி எடுத்த லெட்டியுஸ் இலைகளை சலட் பிளேட்டில் சுற்றிவர வட்டமாக அடுக்கிவிடுங்கள்.

புருட்ஸ், வெஸிட்டபில் அனைத்தையும் உப்பு பெப்பர் கலந்து பிளேட்டின் நடுவில் வைத்து மேலே பிரஸ் கிறீம் போட்டு பரிமாறுங்கள்.

கலர்புல் சலட்டாக இருப்பதால் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பதுடன், பழ வகைகளும் சேர்வதால் பல்சுவையையும் தரும்.

-: மாதேவி :-

Sunday, October 5, 2008

ரம்பை, சேர



சேர, ரம்பை இவை என்ன?

பெயரைப் போலவே கவர்ச்சியாக இருக்கும் தமிழ் நடிகைகளா?

இல்லை! வாசனை ஊட்டிகள்.

பிரியாணி, இறைச்சி, மீன், பருப்பு, கிழங்கு கறிவகைகள், சொதி, ஆகியவற்றிற்கு வாசனை ஊட்டுவதற்காகப் போடும் இலைவகைகள்.

கறிவேற்பிலை போன்றது. ஆனால் இவற்றைச் சாப்பிட முடியாது. எடுத்து ஓரமாக வைத்துவிட்டு வாசனையூட்டப்பட்ட உணவைத்தான்; சாப்பிட வேண்டும்.

சிங்களச் சமையலில் நிச்சயம் இவை இரண்டும் முக்கிய இடம் பெறும். 4-5 அங்குலத் துண்டுகளாக வெட்டிப் போடுவார்கள்.

இங்கு கறிவேற்பிலையுடன் இவை இரண்டையும் சேர்த்துக் கட்டி விற்பார்கள்.

தனியாக வெட்டப்பட்ட இலையாக இருப்பது ரம்பை. இதனை டவுன் பான்டா இலை, வாச இலை, சோற்று இலை எனவும் சிலர் கூறுவர்.

நுனி வெட்டிய செடிபோல இருப்பது சேர. சேரவின் தமிழ்ப் பெயர் தெரியவில்லை. படத்தைப் பார்த்து நீங்கள் யாராவது தெரிந்தால் கூறுங்கள்.

ரம்பை இலை பற்றி இணையத்தில் வந்த பதிவு இது.

Ramba Illai, is knwon as Rhempey in Singhala and in North India but more commonly known as Daun Pandan or Pandan Leaf in Malaysia,Philipines,Singapore and Indonesia, in Tamil it is known as Thaazhai or Kehtaki, in Hindi and sanskrit also it is known as Ketaki..commercially available throughout india as Ketaki Water, botanical name is Pandanus... its rarely bloomed flower used in Serpent Worhip buy Tamilians known as Thaalampoo.

http://www.spiceindiaonline.com/glossary

-: மாதேவி :-