Wednesday, July 30, 2008

சோயா, கிழங்கு, தக்காளி பிரட்டல்


ரைஸ் பிரியாணி, இடியாப்ப பிரியாணி, சாதம், புட்டு, ரொட்டி, சப்பாத்தி போன்ற எதற்கும் ஏற்ற டிஸ்தான் சோயா கிழங்கு தக்காளி பிரட்டல்.

தேவையான பொருட்கள்

சோயா - 1 1/2 கப்
உருளைக் கிழங்கு நடுஅளவாக - 1
தக்காளிப் பழம் - 3
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய்- 1
மிளகாயத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள்- சிறிதளவு
தனியா(மல்லி) தூள் - 1/2 தேக்கரண்டி
டொமாட்டோ சோஸ் - 2 தேக்கரண்டி
சில்லி சோஸ் - 1தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறுவா - 1துண்டு
இஞ்சி - 1 துண்டு(பேஸ்ட்)
சுடுநீர் - 3 கோப்பை

வறுத்துப் பொடியாக்க

கறுவா - 1துண்டு
கராம்பு - 1
ஏலம் - 1
சின்னச்சீரகம் - 1/4 தேக்கரண்டி
தாளிக்க
கடுகு - 1/4 தேக்கரண்டி
இஞ்சி, உள்ளி பேஸ்ட் -சிறிதளவு
ரம்பை - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

செய்முறை

சோயாவை கோப்பை ஒன்றில் இடவும். அதனுடன் கறுவாப்பட்டை ஒரு துண்டு, இஞ்சி பேஸ்ட், உப்பு சிறிதளவு சேர்த்து, மூன்று கோப்பை கொதிநீர் ஊற்றி, மூடி ஊறும் வரை வைக்கவும்.

நீரை வடித்து குளிர்ந்த நீரில் கழுவி பிழிந்து எடுக்கவும்.

கிழங்கு தக்காளி, வெங்காயம் சிறியதாக, தனித்தனியாக வெட்டி வைக்கவும்
மிளகாயை நீளவாக்கில் வெட்டிவிடவும்.

எண்ணெயைச் சூடாக்கி கிழங்கை மெல்லிய பிரவுண் கலரில் பொரித்து எடுத்து வைக்கவும். மீதி எண்ணெயில் கடுகு தாளித்து, இஞ்சி பேஸ்ட் வதக்கி, உள்ளி சேர்த்துக் கிளறி, வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதங்க, ரம்பை, கறிவேற்பிலை சேர்த்து விடவும். சோயாவைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.

அதன்பின் தக்காளி சேர்த்து பச்சை வாசம் போகும்வரை கிளறி. பொரித்த கிழங்கு உப்பு, மிளகாயப் பொடி, மஞ்சள் தனியாப் பொடி கலந்து இரண்டு நிமிடம் விடவும்.

மசாலாப் பொடி, டொமாட்டோ சோஸ், சிலிசோஸ், மல்லித்தழை சேர்த்துக் கிளறி எடுக்கவும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்