Saturday, December 20, 2008

கீரை வித் மாங்காய் சலட்


சாதாரண கீரை மசியல், கீரைப் பொரியல், இரண்டும் சாப்பிட்டு அலுக்கும் போது இப்படி செய்து கொண்டால் சுவை கொடுக்கும்.

குழந்தைகளும் கீரையை தனியே சாப்பிட அடம் பிடிப்பார்கள். மாங்காய் சலட்டுடன் கலந்து கொடுக்கும் போது அடம் பிடிக்காமல் கீரையைச் சாப்பிடுவார்கள்.

அதில் இரு வகை ருசி இருப்பதால் கலந்து சாப்பிடும் போது வித்தியாசமான சுவையைத் தரும்.

சமைத்துத்தான் பாருங்களேன். கீரைக்கு புளிப்பு சலட் சேரும்போது ஆகா சொல்லத் தோன்றும்.


செய்யத் தேவையான பொருட்கள்

1. முளைக்கீரை – 1 கட்டு

2. பச்சை மிளகாய் - 4

3. சாம்பார் வெங்காயம் - 6-7

4. பூண்டு – 4

5. மிளகு, சீரக்கப் பொடி, பெருங்காயப் பொடி – சிறிதளவு

6. அரைத்த தேங்காய் கூட்டு - 1 டேபிள் ஸ்பூன்

7. கெட்டித் தேங்காய்ப்பால் - 2 டேபிள் ஸ்பூன்

8. உப்பு தேவைக்கு ஏற்ப


சலட் செய்ய

1. மாங்காய் -1

2. சாம்பார் வெங்காயம் - 5-6

3. பச்சை மிளகாய் -1

4. சீனி – 1 ரீ ஸ்பூன்

5. உப்பு தேவைக்கு ஏற்ப


செய்முறை

கீரையைத் துப்பரவு செய்து 4-5 தரம் நீரில் கழுவி எடுத்து சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் 2-3 துண்டுகளாக வெட்டுங்கள்.

மிளகாய் நீளமாக வெட்டி எடுங்கள்.

பூண்டு பேஸ்ட் செய்து வையுங்கள்.


பாத்திரத்தில் கீரையைப் போட்டு மிளகாய் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அவிய விடுங்கள்.

அவிந்ததும் சற்று மசித்து பூண்டு பேஸ்ட் மிளகு சீரகப் பொடி வெட்டிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் கிளறுங்கள்.

பின் அரைத்த தேங்காய் கூட்டு, தேங்காய்ப் பால் விட்டு இறக்கி வையுங்கள்.

விரும்பினால் கடுகு வறமிளகாய் தாளித்துக் கொட்டி கலந்து விடுங்கள்.


சலட் செய்முறை

மாங்காயைத் துருவி எடுங்கள்.

புளிமாங்காய் என்றால் சிறிதளவு உப்பு நீர் விட்டு பிழிந்து எடுங்கள்.

வெங்காயத்தை சிறியதாக வெட்டி கலந்து விடுங்கள்.

மிளகாயை 5-6 துண்டுகளாக வெட்டி விடுங்கள்.

சீனி உப்பு சேர்த்து கலந்து விடுங்கள்.

பிளேட் ஒன்றில் கிறீன் லீப் கறியை இரு புறமும் வைத்து சலட்டை நடுவில் வைத்து பரிமாறுங்கள்.

புளிப்புச் சுவையுடன் கூடிய சலட் வித்தியாசமாக இருப்பதால் அனைவரையும் கவரும்.

:- மாதேவி -:

2 comments:

  1. அருமை அருமை- நாவினில் நீர் ஊறுகிறது - நல்ல பதிவு - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நன்றி சீனா, வருகைக்கும். கருத்துரைக்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்