இயற்கையின் படைப்பில் பூக்கள் மிகவும் அற்புதமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அழகைத் தருகின்றன.
பூ என்றாலே அழகு, மென்மை, நறுமணம், கவர்ச்சி என்பன அடங்கியனவாக இருக்கின்றன.
பூக்கள் அழகுடன் மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கின்றன.
மலர்களில் சிலவற்றை உணவுகளாகவும் நீண்ட காலங்களாக உட்கொண்டு வருகின்றார்கள்.
எல்லோரும் முகம் சுழிக்கும் வேப்பம்பூ, வாழைப்பூவுடன், இனிய பூசினிப் பூ, சிவப்பு செவ்வரத்தம் பூ, கற்றாழைப்பூ, வெங்காயப்பூ, குங்குமப்பூ, அகத்திப்பூ, முருங்கைப்பூ, ஆவாரம்பூ எனப் பலபல தொடரும்.
'ரோஜா.. ரோஜா.. ரோஜா... ரோஜா......' மயக்கும் ரோஜாவும் சமையலில் இடம் பிடிக்கும் கேக், புடிங், பானங்கள், ரோஸ் வோட்டர், எசேன்ஸ், எனக் கலக்கும்.
காலிப்ளவர் ,கோவா போன்றவற்றையும் பூ இனம் எனக் கொள்ளலாம்.
ஆங்கிலேய மரக்கறிகளில் புறக்கோலி, கோவா, கூனைப்பூக்கள்
(artichokes)> , காளன்,
Broccoli rabe இலையும் பூக்களும் சாப்பிடக் கூடியன. இன்னும் பலவும் அடங்குகின்றன.
புறக்கோலி
இவ் இனம் ஏறத்தாள 2000 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டிருந்தது.
இதில் பல உப இனங்கள் உள்ளன.
நூறு கிறாமில் புறக்கோலியில் காபோகைதரேட் - 6.64 கிராம், நார்பொருள் - 2.6 கி, கொழுப்பு – 0.37 கி, புறோட்டீன் - 2.82 கி, கல்சியம் - 47 மி.கிராம், மக்னீசியம் - 21 மி.கிராம், விற்றமின் சி – 89.2 மி.கிராம், அடங்கியுள்ளன.
சலட், சூப், ஸ்டிம் என பல வகை தயாரிப்புகளாக உணவில் சுவைக்கும்.
காலி ப்ளவர்
- இதில்உள்ள வேதிப்பொருள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகம் கொண்டுள்ளன.
- நிறமி புற்று நோயைத் தடுக்கும் என்கிறார்கள்.
சூப், மஞ்சூரியன், கூட்டு.... பஜ்ஜி, சப்பாத்தி, பகோடா என...சகலவிதமாகவும் மட்டன், சிக்கன், இறால், முட்டை... எனக் கூட்டுச்சேர்ந்தும் சுவைக்கும்.
கோவா
வளமுள்ள எல்லாவகை மண்ணிலும் வளர்ந்து பயன் தரக் கூடியது.
நீர்தேங்கி நிற்காதிருக்க வடிகால் வசதியிருக்க வேண்டும்.
மலைப் பகுதிகளில் 150 நாட்களில் 1 ஏக்கருக்கு 70 – 80 டன்களும் சமவெளிப் பகுதியில் 120 நாட்களில் 1 ஏக்கருக்கு 25 – 35 டன்களும் பயனாகக் கிடைக்கும்.
மாடியில் வீட்டுத் தோட்டமாகவும் பயிரிட்டுக் கொள்ளலாம்.
- விற்றமின் சி,டீ (Vit C,D) அடங்கியுள்ளது.
- ஒரு கப் Cabbage ல், கொழுப்பு 0.5 கிராம், காபோஹைாதரேட் 5 கிராம், நார்ப்பொருள் 1.8 கிராம், கல்சியம் 41.1 மிகி, பொட்டாசியம் 218.9 மிகி, சோடியம் 16 மிகி,
இதிலும் பல இனங்கள் உள்ளன.
பிரட்டல், ஸ்டீம் சலட், பால்க்கறி, பொரியல், சம்பல், தொக்கு எனப பலவகையாய் செய்து கொள்ளலாம். புட்டு, நூடில்ஸ், ரைஸ் இவற்றுடன் கலந்தும் தயாரிக்க சுவை சேர்க்கும்.
குங்குமப்பூ Saffron
செம்மஞ்சள் நிறத்தை உடையது. இந்தியாவில் கஸ்மீரில் பயிராகிறது.
வாசனையோடு இருக்கும். மருத்துவ குணமுடையது.
இதை உலர வைத்து, உணவுகளில்
- வாசனை ஊட்டியாகவும்,
- நிறத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது.
இன்னமும் பூக்களைப் பறியுங்கள்.
சின்னுவின் சமையலறையில் பூக்கள் மீண்டும் சுவைக்கும்
:- மாதேவி -:
0.0.0.0.0.0.0.0.0