பரம்பரையாக நீண்டகாலமாக வாய் மொழியாக சொல்லப்பட்டு வந்தவைதான் விடுகதைகள். பாட்டிமார்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க, சிந்திக்க வைக்க விடுகதை கூறுவார்கள்.
ஓய்ந்திருக்கும் வேளைகளில் விடுகதைகளைச் சொல்லி அவிழ்க்க முடியுமா என கேட்பதுண்டு. கணவன் மனைவி, காதலன் காதலியும் விடுகதைகளை ஒருவருக்கு ஒருவர் வீசி திக்குமுக்காட வைப்பதுண்டு.
- நாட்டுப்புறப் பாடல்கள், இலக்கியங்கள் இவற்றுள் விடுகதையும் ஒன்று எனச் சொல்லலாம்.
- விடுகதைகள் ஓரிரு வரிகளில் மறைமுகமாக விபரித்து எடுத்துச் சொல்லப்படுபவை.
- சிந்தனையைத் தூண்டி வைப்பது இதன் நோக்கம்.
சில விடுகதைகள் சொல்கிறேன். உங்களால் விடுவிக்க முடிகின்றதா?
- குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல, அது என்ன?
- சடசட மாங்காய் சங்கிலி ரோடு விழுந்தா கறுப்பு, தின்னால் தித்திப்பு. அது என்ன?
- குண்டப்பன் குழியில் வீழ்ந்தான். எழுந்தான், எல்லார் வாயிலும் விழுந்தான் அவன் யார்?
- ஊளை மூக்கன் சந்தைக்குப் போறான். அவன் யார்?
- வெள்ளைக்காரனுக்கு கறுப்புத் தொப்பி அது என்ன?
- மரத்து மேலே பழம் பழத்து மேலை மரம் அது என்ன?
- காற்றுப் புகாத வெள்ளைக் கூண்டில் மஞ்சள் புறா மயங்கிக் கிடக்கு அது என்ன?
- உச்சிக் குடும்பியன் சந்தைக்கு வந்தான். அவன் யார்?
- அம்மா போடும் வட்டம் பளபளக்கும் வட்டம், சுவையைக் கூட்டும் வட்டம், சுட்டுத் தின்ன இஸ்டம் அது என்ன?
- நாலு மூலைச் சதுரப் பெட்டி, அதன் மேல் ஓடுமாம் குதிரைக் குட்டி அவர்கள் யார்?
- பச்சைக் கதவு. வெள்ளை யன்னல் திறந்தால் கறுப்பு ராஜா அது யார்?
- சொறி பிடிச்சவனை கறி சமைத்து சோறெல்லாம் கசப்பு அவன் யார்?
விடைகளைச் சரிபார்க்க கீழே வாருங்கள்.
.................................
..................................................................
...................................................................................................
..................................................................
.................................
.................................
..................................................................
...................................................................................................
..................................................................
.................................
.................................
..................................................................
...................................................................................................
..................................................................
.................................
.................................
..................................................................
...................................................................................................
..................................................................
.................................
.................................
..................................................................
...................................................................................................
..................................................................
.................................
.................................
..................................................................
...................................................................................................
..................................................................
.................................
3 மார்க்குக்கு கீழே விடை தெரிந்தவர்களுக்கு ஹோம்வேக் நிறையவே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சமையலும் தமிழும் கற்றுக் கொண்டு அடுத்த பரீட்சைக்கு வாங்க.
6 விடுகதைகளுக்கு மேலே கண்டு பிடித்தவர்களுக்கு பாஸ் சேர்டிபிக்கற் கிடைக்கிறது.
எல்லா விடைகளையும் சரியாகச் சொன்னவர்களுக்கு ஒரு பரிசு தரலாமா.....
12 விடுகதைகளுக்கும் சரியான விடைகளை கண்டு பிடித்தவர்களுக்கு சின்னுரேஸ்டி விடுகதை வெற்றிக் கேடயம் வழங்கப்படுகிறது. எடுத்துக்கொண்டு சென்று உங்கள் வீட்டில் சேமியுங்கள்.
10 எடுத்தவர்களின் அழும் ஓசை காதில் விழுகிறது சரி நீங்களும் கேடயத்தை பிடித்துக் கொள்ளுங்கோ....
பிறக்கும் 2012 அனைவருக்கும் சகல சிறப்புகளும் அள்ளித் தரும் ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.
- மாதேவி -