Friday, August 29, 2008

உலகமயமானது இது

அறிமுகம் இப்படித்தான் ஆரம்பமானது. எனது ஆறாவது வயதில் அண்ணா கொண்டு வந்திருந்தான், இந்த புதினமான சாப்பாட்டை. ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் மீட்டில் கொடுத்தார்களாம்.

கவனமாக பொக்கற்றில் பதுக்கி தங்கை எனக்காக கொண்டு வந்திருந்தான். மெத்தென கோல்டன் கலரில் என்னைக் கவர்ந்தது. சாப்பிட்டால் கொண்டு வந்த அண்ணனுக்கே அரைவாசி கொடுக்கவே அரைமனம்தான். அவ்வளவு சுவை! பேர் என்னவென்றே தெரியாது. அடுத்த ஸ்போர்ட்ஸ் எப்போவெனக் காத்திருந்தேன்.

பதின்னான்காவது வயதில் நானே செய்யக் கற்றுக் கொண்டேன். அதன் பின் அண்ணனுக்கு அடிக்கடி பரிசு கிடைத்தது. முன்பு தந்ததற்காக.

இங்குதான் கிடைக்கும் என்று எண்ணயிருந்தேன். சீனா, ஜப்பான், பிலிப்பையஸ் என உலகமயமானதுதான்.

கட்லட்

கறி செய்யத் தேவையான பொருட்கள்

எலும்பில்லாத கோழி ¼ கிலோ
உருளைக்கிழங்கு -1
வெங்காயம் - 2
இஞ்சி உள்ளி பேஸ்ட் - 2 ரீ ஸ்பூன்
மிளகு தூள் - 1/4 ரீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை சிறிதளவு
உப்பு சிறிதளவு
இறைச்சிச் சரக்குத் தூள் - 1/2 ரீ ஸ்பூன்
தேசிச்சாறு சில துளிகள்
எண்ணெய் - 2 டேபில் ஸ்பூன்

தோய்ப்பதற்கு தேவையான பொருட்கள்

முட்டை வெள்ளைக்கரு -2
ரஸ்க் தூள் - 1/2 பைக்கற்

பொரிப்பதற்கு
எண்ணெய் ¼ லீட்டர்

சோஸ் தயாரிக்க

தக்காளிப்பழம் - 4(சுடுநீரில் போட்டு தோலை நீக்கி மசித்து எடுங்கள்)
சிலி சோஸ் - ¼ கப்
வெங்காயம் - 1/2
இஞ்சி பேஸ்ட் - ½ ரீ ஸ்பூன்
வினாகிரி - ½ ரீ ஸ்பூன்
உப்பு சிறிதளவு-
எண்ணெய் 2 ரீ ஸ்பூன்

செய்முறை

இறைச்சியை அரைத்து எடுத்து உப்பு, மிளகாய்த் தூள், இஞ்சி, உள்ளி பேஸ்ட் கலந்து பத்து நிமிடம் வையுங்கள்.
கிழங்கை அவித்து எடுத்துக் கொள்ளுங்கள்
வெங்காயம் சிறிதாக வெட்டி வையுங்கள்.
கறிவேற்பிலையை நான்கு துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

தாச்சியில் எண்ணெயை விட்டு, வெங்காயத்தை மெல்லிய நிறத்தில் வதக்கி கறிவேற்பிலை சேர்த்து இறைச்சியைப் போட்டு கிளறி, மூடி போட்டு இரண்டு நிமிடம் விடுங்கள்.
திறந்து பிரட்டிவிட்டு ½ கப் தண்ணி விட்டு மூடிவிடுங்கள்.

இறைச்சி அவிந்து இறுக்கமாக வர அவித்த கிழங்கை மசித்து சேர்த்து, மிளகு தூள், இறைச்சிச் சரக்கு தூவி அடுப்பை நிறுத்தி சில துளி எலுமிச்சம்சாறு விட்டு பிரட்டி ஆறவிடுங்கள். பின்பு சிறு சிறு உருண்மைகளாக உருட்டி சற்றுத் தட்டி வையுங்கள்.

முட்டை வெள்ளைக் கருவை அடித்து எடுங்கள். ரஸ்க் தூளை ஒரு கோப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். தட்டிய கலவைகளை முட்டையில் தோய்த்து ரஸ்க்கில் நன்றாகப் பிரட்டி பிளேட் ஒன்றில் வையுங்கள்.

தாச்சியில் எண்ணெயை விட்டு நன்கு கொதித்த பின் உருண்டைகளைப் போட்டு பொன்நிறமாகப் பொரித்து எடுங்கள். ரிசு பேப்பரில் போட்டு எண்ணெயை வடிய விடுங்கள்.

இந் நேரம் சோஸ் தயாரியுங்கள். எண்ணெய் 2 ரீ ஸ்பூன் விட்டு வெங்காயம் லேசாக வதக்கி இஞசிப் பேஸ்ட் சேர்த்து கிளறி தக்காளிச் சாறைவிட்டு நன்கு வதங்க விடுங்கள். வதங்கியதும் உப்பு, வினாகிரி, சில்லி சோஸ் கலந்து இறக்கி சிறிய பரிமாறும் போலில் ஊற்றி வையுங்கள்.

கட்லட்டுகளை அழகாகப் பிளேட்டில் அடுக்கி சோஸையும் வைத்து வெங்காயத் துண்டங்கள் எலமிச்சை துண்டங்களுடன் பரிமாறுங்கள். விரும்பினால் வெட்டிய மல்லித் தளை தூவிவிடுங்கள்.

குறிப்பு
அசைவம் உண்பவர்கள் முட்டை, மீன், விரும்பிய இறைச்சி வகைகளிலும் செய்து கொள்ளலாம். சைவம் உண்பவர்கள் கிழங்கு, கரட், லீக்ஸ், கொண்டு கட்டிக்கறி தயாரித்தும், வாழைக்காய், மரவள்ளிக் கிழங்கு, கத்தரிக்காயிலும் செய்து கொள்ளலாம். முட்டைக்குப் பதில் மைதாமா கரைசலில் தோய்த்து ரஸ்க் தூளில் நன்றாகப் பிரட்டி பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

:-மாதேவி:-

Tuesday, August 26, 2008

இடியப்பப் பிரியாணி எனக்குப் பிடித்தது ….... உனக்கும் பிடிக்குமா -


சுவை கொடுக்கும் சுப்பர் ஸ்டார்தான்
என்னவென்று சொல்வதுங்கோ …
அவற்றின் ருசியை

இடியாப்ப பிரியாணி

இரண்டு பேருக்கு அளவாக

தேவையான பொருட்கள்
இடியாப்பம் 12
உருளைக் கிழங்கு – 1
கரட் -1
லீக்ஸ் - 1
கோவா (ஊயடியபந)– ¼ துண்டு
வெங்காயம் - 1
கஜீ -10
பிளம்ஸ் சிறிதளவு
நெய் அல்லது பட்டர்- 4 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள், ஏலக்காய் தூள்- சிறிதளவு
உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை

கரட்டை துருவி வைத்துக் கொள்ளுங்கள். கிழங்கு, லீக்ஸ், கோவா, வெங்காயம் ஆகியவற்றை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
இடியாப்பத்தை உதிர்த்து வையுங்கள்.

பாத்திரத்தில் நெய் விட்டு கிழங்கு வதங்கிய பின், வெங்காயம் போட்டு அவிந்த நிறம் வரும் வரை வதக்குங்கள். கஜீ, பிளம்ஸ் போட்டு வறுத்து, கரட், லீக்ஸ், கோவா சேர்த்து 2 நிமிடங்கள் பிரட்டிக் கொள்ளுங்கள்.

மிளகு தூள் ஏலத்தூள் உப்புப் போட்டு உதிர்த்த இடியப்பம் போட்டுக் கிளறி எடுத்து சேரவிங் பிளேட்டில் போட்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

இத்துடன் பட்டாணிக்கறி, சோயாக்கறி, கத்தரிக்காய்ப் பிரட்டல், கிழங்கு மசாலா, அச்சாறு, சலட், கட்லற் அல்லது வடை வைத்துப் பரிமாறிக் கொள்ளுங்கள்.
சாப்பாட்டுக்குப் பின் டெசேட்டும் பரிமாறுங்கள்.

குறிப்பு
அசைவப் பிரியர்களுக்கு இடியப்ப பிரியாணியில் பொரித்த இரால் 15, 2 பொரித்த முட்டைகளை துண்டங்களாக வெட்டி கலந்து விடுங்கள்.

இத்துடன் கோழி அல்லது ஆட்டிறைச்சிப் பிரட்டல், மீன் பொரியல், கொண்டு பரிமாறுங்கள்.
:- மாதேவி:-

Friday, August 22, 2008

கண்டவுடன் தட்டுக் காலிதான்.



எங்கள் அம்மம்மா, அம்மா யாவரும் செய்ததுதான். இப்பொழுது நாங்கள். இனிப் பிள்ளைகளும் கூட செய்வார்கள். பழகிய சிற்றுண்டிதான். ஆனாலும் என்றுமே கண்டவுடன் தட்டுக் காலிதான்.

பெரியோர் முதல் குழந்தைகள் வரை விரும்பும் உணவு வகைகளில் இதுவும் ஒன்று.

பற்றிஸ்

கறி செய்யத் தேவையான பொருட்கள்.

1. எலும்பில்லாத மட்டன் - ¼ கிலோ

2. வெங்காயம் - 1
3. மிளகாயத் தூள் - 1 ரீ ஸ்பூன்
4. தனியாத் தூள் - ½ ரீ ஸ்பூன்
5. சீரகத்தூள் - ½ ரீ ஸ்பூன்
6. மஞ்சள் தூள் - சிறிதளவு
7. மட்டன் மசாலா - 1 ரீ ஸ்பூன்
8. இஞ்சி உள்ளி பேஸ்ட் 2 ரீ ஸ்பூன்
9. உப்பு தேவையானளவு
10. கறிவேற்பிலை - சிறிதளவு
11. எலுமிச்சைச் சாறு – சில துளிகள்
12. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்யும் முறை

இறைச்சியை அரைத்து எடுத்து அதனுடன் உப்பு, தனியாத் தூள், மிளகாய்த்தூள், மட்டன் மசாலாத் தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி உள்ளி பேஸ்ட் பிரட்டி, 15 நிமிடம் ஊறவிடுங்கள்.

பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைத்து வெங்காயம் சேர்த்து வதக்கி, கறிவேற்பிலை போட்டு, இறைச்சியைச் சேர்த்து வதக்குங்கள். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி அவியவிடுங்கள். இடையிடையே பிரட்டி விடுங்கள். எண்ணெய் தண்ணீரிலேயே இறைச்சி அவிந்துவிடும்.

அவிந்ததும் தேசிச்சாறு சேர்த்து இறக்கி வையுங்கள்.

பற்றிஸ் மேல்மாவு தயாரிக்க தேவையான பொருட்கள்.

1. மைதா மா – 250 கிராம்

2. உப்பு – சிறிதளவு
3. பேக்கிங் பவுடர் - சிறிதளவு
4. பட்டர் - 1 ரீ ஸ்பூன்
5. பொரிப்பதற்கு எண்ணெய்

மாவை கோப்பையில் இட்டு உப்பு, பேக்கிங் பவுடர், பட்டர் சேர்த்துக் கிளறி தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவுபோல இறுக்கமாக நன்றாகக் குழைத்து எடுத்து இறுக்கமாக மூடி 3-4 மணித்தியாலம் வைத்து விடுங்கள்.

பின்பு எடுத்து போட்டில் சிறிது மாவு தூவி, குழைத்து வைத்த மாவில் சிறிய அளவாக பந்துபோல உருட்டி எடுத்து, போட்டில் வைத்து வட்டமாகவும் மெல்லிதாகவும் உருட்டிக் கொள்ளுங்கள்.

ஒரு ரீ ஸ்பூன் கறியை வைத்து அரை வட்டமாக மூடி, ஓரங்களை மடித்து விடுங்கள். (அச்சில் போட்டும் வெட்டிக் கொள்ளலாம்.)

மிகுதியையும் இவ்வாறே செய்து கொள்ளுங்கள்.

தாச்சியில் எண்ணெயை விட்டு கொதித்ததும் பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். தக்காளி ஸோசுடனும், கடிப்பதற்கு வெங்காயம் தக்காளி துண்டங்களும் வைத்துக் கொண்டால் இறைச்சிச் சுவையுடன் தட்டுக் காலியாகிவிடும்.

குறிப்பு

சைவம் உண்பவர்கள் கிழங்குக்கறி, சோயாக்கறி போன்ற ஏதாவது ஒன்றை வைத்து தயாரித்துக் கொள்ளலாம்.

-: மாதேவி :-

Tuesday, August 19, 2008

வெள்ளிக்கிழமை ஸ்பெசல்

வெள்ளிக் கிழமை நாட்களில் அதிகாலையிலேயே வீடுகளில் பரபரப்பு. பாத்ரூம்களில் ஓடும் நீரால் தண்ணி பில் அன்றே இரட்டையாகும். பலர் வீடுகளில் விரதம். விரதம் இல்லாவிட்டாலும் சைவம். வீடு மொப் செய்தல், உடுப்பு அலசல் எனப் புனிதப்படுத்தும் வீட்டு வேலைகள் நாரியை முறிக்கும்.

கோவிலில் வருகை பதியும் பணியும் காத்திருக்கும்.

திரும்பும் வழியில் வெள்ளவத்தை காலி வீதி முழுவதும் பலரது கைகளிலும் தொங்கும் பைகளில் மரக்கறிகளும் பழங்களும் நிறைந்து வழியும்.

பாக்கிற்குள் இருந்து ஒருவர் எட்டிப் பாரப்பார். ஒல்லியாக நீட்டம் நீட்மாக, பச்சைக் கலரில்!

அன்று அவருக்கு சந்தையில் டிமான்ட அதிகம். சந்தை வியாபாரி கூசாமல் விலையை 10, 20 கூட்டிச் சொல்வான்.

மஹியங்கனவில் இருந்து வந்தாலும் யாழ்ப்பாண முருங்கா! மலிவு மலிவு எனக் கூவுவார்கள்.

மதியமானால் காக்காக் கூட்டங்களின் பாட்டும் கூடிவரும். மாமிசப் பிரியர்களும் இவர் இருந்தால் சமாளித்துவிடுவார்கள். வெள்ளிக்கிழ்மைக்கு எல்லாரும், எல்லாமும் இசைவாக்கம் ஆகிவிடுகின்றனவா?

பொதுவாகவே முருங்கைக் காயை பலரும் குழம்பாகவே செய்து கொள்வர். இது சற்று வித்தியாசமான பிரட்டல் கறிவகை. வாய்கு மிகவும் ருசியானது.

முருக்கைக்காய்ப் பிரட்டல்

தேவையான பொருட்கள்

1. முருங்கைக் காய் - 2
2. உருளைக் கிழங்கு பெரியது - 1
3. பெரிய வெங்காயம் - 1
4. தக்காளி -4
5. பச்சை மிளகாய் - 1
6. பூண்டு – 2
7. வெந்தயம் - 1 ரீ ஸ்பூன்
8. தேங்காய்த் துருவல் - 1 கப்
9. மிளகாய்ப்பொடி – 1 ரீ ஸ்பூன்
10. தனியாப்பொடி – 1/2 ரீ ஸ்பூன்
11. சீரகப்பொடி - 1/2 ரீ ஸ்பூன்
12. மஞ்சள்பொடி சிறிதளவு
13. உப்பு தேவைக்கு ஏற்ப

தாளித்துக்கொள்ள

1. கடுகு சிறிதளவு

2. உழுத்தம் பருப்பு - 1/2ரீ ஸ்பூன்
3. ரம்பை ஒரு துண்டு
4. கறிவேற்பிலை சிறிதளவு
5. தாளிக்க எண்ணெய் - 2 ரேபில் ஸ்பூன்

செய்முறை

முருங்கைக்காயை சின்ன விரலளவு துண்டங்களாக வெட்டி எடுங்கள். கிழங்கையும் தக்காளியையும் தனித்தனியே துண்டங்களாக வெட்டி வையுங்கள். வெங்காயத்தை சிறியதாக வெட்டுங்கள். மிளகாயை நீளவாட்டில் 2 துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். உள்ளியை பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய்த் துருவலிலிருந்து 2 கப் பால் தயாரித்துக் கொளளுங்கள்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை விட்டு கடுகு உழுத்தம் பருப்புப் போட்டு, உள்ளிப் பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின்பு வெந்தயம் ரம்பை கருவேற்பிலை போட்டு முருங்கைக்காய்களைக் கொட்டி 2 நிமிடங்கள் வதக்குங்கள். சற்றுப் பச்சை வாசம் போக பாலூற்றி கிழங்கு சேர்த்து 9-13 வரையான பொருட்களைச் சேர்த்துக் கிளறி, இறுக்கமான மூடி போட்டு அவிய விடுங்கள்.

5 நிமிடத்தின் பின் திறந்து பிரட்டி விடுங்கள். மீண்டும் மூடி போட்டு 2 நிமிடம் அவிய விடுங்கள்.

2 நிமிடத்தின் பின் திறந்து தக்காளி சேர்த்து திரும்பவும் மூடி, அடுப்பைக் குறைத்து 5 நிமிடம் விடுங்கள்.

இப்பொழுது திறந்தால் இறுக்கமாக வந்திருக்கும். அடியில் சற்று குழம்பு இருந்தால் திறந்தபடி விட்டுப் பிரட்டி, குழம்பு நன்றாக வற்றி வரள இறக்குங்கள்.

முருங்கைக் காய்களின் மேற் தோலும் மென்மையாக வந்து விடும். மணமும் ஊரைக் கூட்டும்.

காரக் கூட்டு முருக்கைக்காய்

தேவையான பொருட்கள்

1. முருங்கைக்காய் - 3 சற்று சதைப்பிடியான காயாக இருக்க வேண்டும்.
2. வாழைக்காய் -1
3. சின்ன வெங்காயம் -10
4. பச்சை மிளகாய் -1
5. தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
6. செத்தல் மிளகாய் - 5,6
7. மிளகு – ½ ரீ ஸ்பூன்
8. சீரகம் - ½ ரீ ஸ்பூன்
9. மஞ்சள் சிறிதளவு
10. பூண்டு – 4
11. புளி – ஒரு சிறிய எலுமிச்சையளவு
12. உப்பு தேவையான அளவு

தாளித்துக்கொள்ள

1. கடுகு – சிறிதளவு

2. கருவேற்பிலை – சிறிதளவு
3. எண்ணெய் - 1 ரீ ஸ்பூன்

செய்முறை

முருங்கைக்காயை விரலளவு துண்டங்களாகவும், வாழைக்காயை நீளத் துண்டுகளாகவும் வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயங்களை இரண்டு மூன்றாக வெட்டிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிவிடுங்கள்.

தேங்காயைத் தனித்தும், செத்தல் மிளகாய், மிளகு, சீரகம், மஞ்சள், பூண்டு ஆகியவற்றைப் பிறிதாகவும் அரைத்து எடுங்கள்.

பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணி விட்டு முருங்கைக்காயையும் வாழைக்காயையும் உப்பு சேர்த்து, மூடி போட்டு அவிய விடுங்கள். முக்கால் பாகம் வெந்ததும், மிளகாய்க் கூட்டுப் போட்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து கிளறி மூடிவிடுங்கள். இரண்டு நிமிடம் ஆனதும் திறந்து, தேங்காய்க் கூட்டுப் போட்டு கிளறி புளி கரைத்து ஊத்திவிடுங்கள்.

தடிப்பாக வர இறக்கி எடுத்து வையுங்கள். பின்பு தாளித்துக் கலந்து கொள்ளுங்கள்.

காரக் கூட்டு மணத்துடன் கறி தயார்.

:-மாதேவி-:

Friday, August 15, 2008

பைன் அப்பிள் நெய்ச்சாதம்

தங்கம் போலத் தகதகப்பாள், முள் போன்ற மேனியாள் பச்சைக்கிரீடமும் உடையாள் அவள் …

அன்னாசி நெய்ச்சாதம்

தேவையான பொருட்கள்

 அன்னாசி - 2 காய்ப் பழமாக

 அரிசி – 1 கப் (சம்பா அல்லது பசுமதி)

 பச்சைமிளகாய் - 3
 ஸ்பிரிங் அனியன் - சிறுகட்டு – 1
 மிளகாய்ப் பொடி – ½ தேக்கரண்டி
 இஞ்சிப் பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
 வெந்தயம் - 1 ரீ ஸ்பூன்
 நெய் - 3 டேபில் ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

செய்முறை

அன்னாசி ஒன்றை எடுத்து சிறுதுண்டங்களாக வெட்டியெடுத்து மிக்ஸியில் அடித்து ஒரு கப் ஜீஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

மற்றைய அன்னாசியை மூள், தோல் இருக்கத்தக்கதாக நன்றாகச் சுத்தப்படுத்தி உப்பு நீரில் கழுவியெடுங்கள். நீளவாக்கில் மூள் இருக்கத்தக்கதாக ¼ பாகம் வெட்டி எடுங்கள். இவ்வாறு வெட்டியெடுத்ததும் மிகுதி கோப்பை போலத் தோன்றும். இதன் உள் இருக்கும் சதையை கூரிய கத்தியால் கவனமாக கோப்பை சிதையாது வெட்டி எடுங்கள். இந்த துண்டுகளை மேலும் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயத் தாரையும் சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை நீளவாக்கில் நடுவே கீறிவிடுங்கள்.

பாத்திரத்தில் இரண்டு டேபில் ஸ்பூன் நெய் விட்டு, அதில் வெந்தயம் வறுத்து, இஞ்சிப் பேஸ்ட் சேர்த்து, பச்சைவாடை போகக் கிளறுங்கள். இனி அன்னாசி ஜீஸ் ஒரு கப் சேர்த்து, மேலதிகமாக ஒரு கப் தண்ணீரும் விட்டுக் கொள்ளுங்கள். உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து அவிய விடுங்கள். விரும்பினால் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். சாதம் அவிந்ததும் எடுத்து வையுங்கள்.

தாச்சியில் 2 ரீ ஸ்பூன் நெய் விட்டு, வெட்டிய அன்னாசித் துண்டுகளைச் சேர்த்து, ஓரு நிமிடம் கிளறி உப்பு சேர்த்து எடுத்து வையுங்கள். அதே தாச்சியில் வெங்காயத்தாரைப் பிரட்டி பச்சை நிறம் மாறுமுன் சாதத்தை தாச்சியில் போட்டு அன்னாசித் துண்டுகள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எடுத்து வைத்த முழு வெங்காயத்தாரை பரிமாறும் தட்டில் வைத்து, கோப்பை போன்ற அன்னாசியையும் வைத்து, சாதத்தை அதனுள் நிறைத்து விடுங்கள். வெட்டிய அன்னாசித் துண்டுகள் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

அன்னாசி நெய்ச் சாதம் தயார்.

குறிப்பு:- சைவப் பிரியர்களுக்கு உருளைக் கிழங்கு காரப் பிரட்டல் தொட்டுக் கொள்ள உகந்ததாக இருக்கும். அசைவ பிரியர்கள் சில்லி சிக்கன் அல்லது டெவில்ட் புரோன் சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.

மாதேவி


Wednesday, August 13, 2008

வாய்க்கு ருசியான சாப்பாடு!

வாரத்திட்டமும் வந்தது
வாய்க்கு ருசியான சாப்பாடு!

அத்தான் வாயில் பல்லு
குழந்தைகளுக்கோ
ஹக்கக்கா ..ஹய்!
வீடே கமகமக்கிறது
கை மணத்தில்.

பொமி ஜொனியாரும் சிரித்துக் கொண்டே
வாலை ஆட்டி ஆட்டி வாறானே
அவுட் ஹவுஸ் கூட்டுக்குள்ளே
ரீட்டாவுக்கோ நாசியில் மணக்க
கோபம் தெறிக்க
வள் வள் வள் ..
வீட்டினுள் பாயக்
காத்துக் கிடக்கிறான்.
பூசிக் குட்டியாரும்
வளைய வளைய
காலுக்குள் வருகிறார்.

குடும்பமே போற்றி நிற்கிறது
வாரத்திட்டத்தை.

வாழ்க வளர்க

வாரத் திட்டம்.

கிளிக்குங்கள் :-

http://thamizhcooking.blogspot.com/

-: மாதேவி:-

Saturday, August 9, 2008

ஆரோக்கிய ஜீஸ் வகைப் பானங்கள்



நாங்கள் காலையில் எழுந்ததிலிருந்து படுக்கைக்குச் செல்வது வரை அன்றாடம் தண்ணீர் அடங்கலாக 6-7 கிளாஸ் வரை, அல்லது அதற்கும் கூடுதலாக நீராகாரம் அருந்துகிறோம். கோப்பி, ரீ, கோலா, பன்ரா, சோடா, கோடியல் போன்ற எல்லாப் பானங்களும் அதற்குள் அடங்கும்.

இவற்றில் உள்ள இனிப்பு நாவுக்கு நல்ல சுவையாக இருப்பதால் அடிக்கடி குடிக்கத் தூண்டுகிறது. ஆயினும் மென்பானங்களை அருந்துவதால் உடலுக்கு ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகளை நீங்களும் கட்டாயம் வாசித்திருப்பீர்கள்.

மென்பானங்களை தொடர்ந்து அருந்தி வருபவர்கள் பலருக்கும் இளவயதிலேயே நீரிழிவு, கொலஸ்டரோல், அதீத எடை போன்ற உடல் நலக் கேடுகள் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதனைத் தவிர்ப்தற்கு எமது உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

இயற்கை எமக்கு இனிதே அளித்துக்கொண்டிருக்கும் பழவகைகள், காய்கறிகள் ஆகியவற்றின் சாற்றிலிருந்து தயாரிக்கும் பானங்களை அருந்துவதால் உடலை ஆரோக்கியமாகப் பேணிக்கொள்ளலாம்.

சீசனில் கிடைக்கும் அவற்றிலிருந்து உடலுக்கு வேண்டிய விற்றமின்களையும் பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களையும் இயற்கையாகப் பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறான சில பானங்கள் பற்றி இந்த இடுகையில் தர முயல்கிறேன்.

கோலாப் பிரியர்களிடமிருந்து வரவேற்பு கிடைக்குமா?

மனதைக் கவரும் விதமாக உயரமான கண்ணாடி கிளாஸ்களில் தயாரித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்தால் ஜில் ஜில் என அருந்த அழைக்கும். மென்பானங்களுக்கு bye bye.

ஆரோக்கிய ஜீஸ் வகைப் பானங்கள் சில பற்றிப் பார்ப்போமா?

தோடை, எலுமிச்சை, லைம், நாரத்தை, பாஸன் வகைகள்

ஒருவர் பருகுவதற்கு பொதுவாக ஒரு பழம் போதுமாக இருக்கும். இருந்தாலும் விருப்பத்திற்கு ஏற்ப சாற்றைப் பிழிந்து எடுத்து ஒரு கப் தண்ணீர் விட்டுக் கலக்கி, வடித்து 2 ரீ ஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து செய்து கொள்ளுங்கள். சுவை சேர்க்க விரும்பினால் எலுமிச்சை, லைம் இரண்டிற்கும் இஞ்சிச் சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வகை பானங்களை குளிரூட்டியில் வைத்துப் பருகிக் கொள்ளலாம்.

பப்பாளி - 2 பெரிய துண்டுகள், மாம்பழம் -1, விளாம்பழம் -1 , வாழைப்பழம் - 2, பட்டர் புருட் - 1, கொய்யாப்பழம் - 1, சப்போட்டா - 1,2, அண்ணாமுண்ணாப் பழம் விதைகள் நீக்கி -1, நாவல்பழம் விதைகள் அகற்றி - 1/2 கப்.

இவ்வகைப் பழங்களுக்கு ஒரு கப் பால் கலந்து மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொள்ளுங்கள். விளாம்பழம், கொய்யாப்பழம் விதைகள் இருப்பதால் வடித்து எடுக்க வேண்டும். விருப்பத்திற்கும் பழத்தின் இனிப்புக்கும் ஏற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
சில துளி எஸன்ஸ் வகைகள் இவ்வகைப் பானங்களில் சேர்த்துக் கொள்ளலாம். (வனிலா, லெமன், ஸ்டோபரி, பைன்அப்பிள், ரோஸ், ஆமென்ட்)

அப்பிள் - 1, அன்னாசி - பெரிய 2 துண்டுகள், திராட்சை - 1/2 கப், பியர்ஸ் - 1, மாதுளை - 1/2 கப், தக்காளி - 1-2, தற்பூசணி - 1 கப், வெள்ளரிப்பழம் - 1 கப்,

இவற்றில் வேண்டியதைத் தேர்ந்தெடுத்து மிக்ஸியில் அடித்தெடுத்து சீனி சேர்த்து பிரிட்ஜில் வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
அன்னாசி ஜீசில் பரிமாறு முன் chop செய்த அன்னாசிக் கலவை சேர்த்து, மேலே வனிலா ஐஸ்கிரீம் ஒரு ஸ்கூப் போட்டால் சுவை தித்திக்கும்.
அப்பிள் ஜீசுக்கு chop செய்த அப்பிள் தூவிவிட மேலே மிதந்து நின்று வாவா என்று அழைக்கும்.
உங்கள் விருப்பம் போன்று ஏனைய ஜீஸ்களையும் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

பால் பொருட்களிலிருந்து தயாரிக்கக் கூடிய பானங்கள் சில

பால் - பாதாம். முந்திரிகைப் பருப்புகளை ஊற வைத்துக் கலந்து, சர்க்கரை சேர்த்து அருந்திக் கொள்ளலாம். பருப்புகளை பாலுடன் மிக்ஸியில் அடித்ததெடுத்தும் உங்கள் விருப்பம் போல் அருந்திக் கொள்ளுங்கள்.

லசி - 1/2 கப் தயிருடன் 1/2 கப் தண்ணீர் விட்டு அடித்தெடுத்து சர்க்கரை சேர்த்து பிரிட்ஸில் வைத்து எடுங்கள்.

மோர் - 1/2 கப் தயிருடன் 1 கப் தண்ணீர் விட்டு அடித்து, மேலே வரும் வெண்ணையை எடுத்துவிட வேண்டும். பின்பு சிறிதளவு உப்புக் கலக்கி அருந்திக் கொள்ளலாம். வாய்க்கு இதமாக வேண்டுமானால் சிறியதாகக் கொத்திய மாங்காய், வெள்ளரி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய். மல்லித்தளை, கறிவேற்பிலை விரும்பியவற்றைக் கலந்து கொண்டால் சூப்பராக இருக்கும்.

இளநீர்- நேரிடையாகவே அருந்திக் கொள்ளுங்கள். இளநீருடன் இருக்கும் தேங்காய் வழுக்கலையும் சேர்த்து சில துளி எலுமிச்சம் சாறும் கலந்து குடித்தால் செம ரேஸ்ட்தான்.

பனம் நுங்கு - நேரிடையாக சுவைக்க சுவைக்க விரும்பிய அளவு அருந்திக் கொள்ளக் கூடியது. பிரிட்ஸில் வைத்தும் அருந்திக் கொள்ளலாம்.
கரும்புச் சாறு - சிறிதாக வெட்டிய கரும்புத் துண்டுகள் தேவையான அளவு எடுத்துக் கொண்டு மிக்ஸியில் அடித்து எடுத்து, வடித்து அருந்திக் கொள்ளுங்கள். கருப்பஞசாறைக் கண்டால் ஈயும் இளித்துக் கொண்டு வந்துவிடும். கவனமாக மூடி வையுங்கள்.

பதநீர்(கருப்பணி) - நேரடியாகவே பருகி கொள்ளக் கூடியது. அதிலுள்ள சுண்ணாம்புச் சத்திற்கு சுவை ஊட்ட சிறியதாக வெட்டிய மாங்காய்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
பதநீரில் பச்சையரிசி போட்டு அவிய வைத்து கருப்பணிக் கஞ்சியாகவும் பருகிக் கொள்ளலாம்.

சர்க்கரைத் தண்ணீர் - எலும்மிச்சம்பழம், வெல்லம், அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பழத்தீர்த்தம் - இளநீர் பாலுடன் மாம்பழம், வாழைப்பழம், எலுமிச்சை, மாதுளை, பேரீச்சு, விளாம்பழம் இவற்றுடன் வெல்லம் கலந்து கரைத்துக் கொண்டால் மிக்ஸ் புருட் பானம் தயாராகிவிடும்.

சாதக்கஞ்சி - சாதம் அவிந்து தடிப்பாக வரும்போது வடித்தெடுத்து உப்புச் சேர்த்து அருந்தலாம். ருசிக்கு தேங்காயப் பாலும் ஒரு மேசைக்கரண்டி சாதமும் சேர்த்துக் கொள்ளலாம்.

தெளிந்த பழம் சோற்று நீர் - ஒரு கப் எடுத்து உப்பு, தயிர், வெங்காயம், ஊறுகாய், பச்சைமிளகாய் சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.

கசப்பு இல்லாத, உடலுக்கு ஹெல்தியான பானங்கள

மல்லித்தழை, புதினாத்தழை இரண்டையும் தனித்தனியாகவோ சேர்த்தோ ஒரு கப் தண்ணீர் விட்டு அடித்து எடுத்து, உப்பு, மிளகுதூள், லைம் ஜீஸ் கலந்து அருந்துவது ஹெல்த்தியானது.

கரட அல்லது பீட்ரூட்- சிறிதாக வெட்டி ஒரு கப் எடுத்து உப்பு, மிளகுதூள், அல்லது ஒரு கப் பால் சீனி சேர்த்தும் அருந்திக் கொள்ளலாம்.
வெள்ளரிப் பிஞ்சு - பிஞ்சு வெள்ளரிக்காயாக எடுத்து ஒரு கப் தண்ணீர் விட்டு அடித்து எடுத்து, உப்பு, மிளகு. இஞ்சிச்சாறு கலந்து அருந்திக் கொள்ளுங்கள்.

நெல்லிக்காய் - 3,4 எடுத்து விதையை நீக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு அடித்து உப்பு சேர்த்துக் கொண்டால் புளிப்பு சுவையுடன் இருக்கும்.

தினமும் நாம் அருந்தும் தண்ணீரிலேயே ஒரு நாளுக்கு ஒன்றாக சீரகம், தனியா, துளசி இலைகள், கற்பபூரவெள்ளி இலைகள் சேர்த்து ஊறவிட்டு நேரடியாக பருகிக் கொள்ளலாம். சுவைக்கு எதுவும் சேர்க்க வேண்டியதில்லை. இவைகள் உடலுக்கு குளிர்மை தரக் கூடியன. தண்ணீர்த் தாகத்தையும் தணிக்கும்.

தேயிலை, கோப்பி, கொக்கோ வகைப் பானங்கள் அருந்த விருப்பமுடையவராக இருந்தால் இவ்வகைப் பானங்களில் ஏதாவது ஒன்றை நாளுக்கு இரண்டு தடவைக்கு மேல் அருந்துவதைத் தவிர்த்துக் கொண்டால் உடல ஆரோக்கியம் நல்ல நிலையில் இருப்பதை நீங்களே உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

சர்பத், பலூடா போன்ற கலரிங் கலந்து செயயும் பானங்களைத் தவிர்த்துவிடுவது நன்மை தரக் கூடியதாக இருக்கும்.




Wednesday, August 6, 2008

சில்லுக்களி



,e;j thuj; jpl;lj;jpw;fhf

,q;nfy;yhk; rpy;Yf;fsp fhu;j;jpif tpsf;fPl;L ehspd; ];ngry; mapl;lk;. MapDk; Foe;ijfSf;F vd;W jahupj;jhYk; ];ngry; MfNt ,Uf;Fk;. tpUe;jpdu; tUk; NghJ jahupj;jhy; te;jtu; kdk; FspUk;.

rpy;Yf;fsp

Njitahd nghUl;fs;
tWj;j muprpkh 2 fg;
tWj;j cOe;Jkh
1/2 fg;
ru;f;fiu
1/2 fg;
tWj;J cilj;j ghrpg;gaW
4 Njf;fuz;b
Ke;jpupg; gUg;G
100 fpuhk;
Ke;jpup tj;jy;
50 fpuhk;
Vyf;fha; nghb
rpwpjsT
Njq;fha;j; JUty;- 2 fg;
nea; - 2 Njf;fuz;b
cg;G rpwpjsT


nra;Kiw

ghrpg;gUg;ig FioatplhJ jdpj;jdpahf ,Uf;Fk;gb mtpj;J vLj;J itAq;fs;. muprpkh> cOe;Jkh ,uz;ilAk; ghj;jpuj;jpy; Nghl;L rpwpJ cg;Gf; fye;J khTld; Nru;j;Jf; nfhs;Sq;fs;. jz;zPiu rpwpJ rpwpjhf tpl;L ifahy; Fioj;J nfl;bkhT jahupj;Jf; nfhs;Sq;fs;. khit rpwpa msthf vLj;J cUz;ilfshf cUl;b cUl;b> rw;Wj; jl;ilahf rpy;Yg;Nghy tUk;gbahf mOj;jp vLq;fs;.

mLg;gpy; ,l;ypg; ghj;jpuj;ij my;yJ iu]; Ff;fiu itj;J jz;zPu; tpLq;fs;. ];uPk; jl;Lg; Nghl;Lf; nfhjpf;ftpLq;fs;. ePu; nfhjpj;jJk; jl;ba rpy;Yf;fis nkJthf> Ftpglhky; gutyhfg; Nghl;L gj;Jepkplk; mtpj;J vLj;Jf; nfhs;Sq;fs;.

Njq;fhaj; JUtiy vLj;J nfl;bg;ghy; 2 fg; jahupj;Jf; nfhs;Sq;fs;.

nea;iaj; jhr;rpapy; tpl;L Ke;jpupg; gUg;G> tw;wy; Mfpatw;iw tWj;J vLj;J itj;Jf; nfhs;Sq;fs;.

Njq;fha;g;ghiy tpl;L ru;f;fiu Nru;j;J fyf;fp nfhjpf;f tpLq;fs;. ghy; nfhjpj;J tu mtpj;j rpy;Y> ghrpg;gUg;G> f[P. gpsk;];> Vyf;fha;g; nghb> Mfpatw;iwr; Nru;j;J> rpy;Yfs; cilahjthW jl;ilf; fuz;bahy; gpul;b tpLq;fs;.

ghy; fspahf ,Uf;Fk;NghNj ,wf;fp itj;J tpl Ntz;Lk;.

cOj;jk; kh> Njq;fha;g;ghy;> gUg;G> Ke;jpup thridAld; rpy;Yf;fsp jahuhfptpl;lJ.

fg;fspy; Nghl;L ];G+dhy; thapy; Nghl;lhy;> ,dpg;Gk; ghYk; fye;j Rit kPz;Lk; rhg;gplj; Jhz;Lk;.


,d;W jahupj;jij Fspu;g; ngl;bapy; itj;J kWehs; vLj;J cz;lhy; Njq;fhag;ghy; fsp rw;W ,Wfp mofhfj; njuptJld; RitAk; myhjpahf ,Uf;Fk;.


;.

Sunday, August 3, 2008

இடியப்பம் + அதற்கான வெஜி டிஸ்களும்


காலைத் தூக்கம் பற்றி சொல்லவே தேவையில்லை. இதமான மெல்லிய குளிர் காற்று உடலை வருடிக் கொண்டிருக்க ஆழ்ந்து உறங்குவதிலுள்ள சுகம் எழுத்தில் சொல்லி மாளாது.

அவ் உறக்கத்தின் ஊடே அம்மாவி்ன் அம்மாவின் கைமணமும் சேர்ந்து வருமே அடுக்களையிலிருந்து. முட்டைப் பொரியலின் மணமும் அதனுடன் கூடிய பாற்சொதியின் வாசமும் சேர்ந்து மூக்கைத் துளைக்க தூக்கம் தானே பறக்கும். வயிறு எழ ஆரம்பிக்கும்.

'இன்று என்ன சாப்பாடு என்ற எண்ணமும் பிறக்குமே'. அதற்குள் மிளகாய் வறுத்த கார வாசமும் எழ புரிந்துவிடும்.

ஐ . . . இடியாப்பம்.
உரலின் ஓசை உறுதிப்படுத்தும்.

அடி சக்கை இடிசம்பலும் கிடைக்கும்போல!

இடியப்பத்திற்குள் நாமும் செல்வோமா?

இடியப்பம்
தேவையான பொருட்கள்

வறுத்த அரிசிமா -2 கப்
அவித்த மைதாமா - 1/4 கப்
உப்பு சிறிதளவு
கொதிநீர்


செய்முறை

ஒரு பாத்திரத்தில் மாவைப் போட்டு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆவி பறக்கும் சூட்டில் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி மரக்கரண்டிக் காம்பால் கிளறி இறுக்கமான மாவு தயாரித்து எடுக்கவும்.

இட்லிப் பாத்திரம் அல்லது ரைஸ் குக்கரில் நீர் விட்டு, ஸ்ரிம் தட்டு போட்டு பாத்திரத்தை மூடி கொதிக்க வையுங்கள். இடியப்ப உரலை எடுத்து மாவை வைத்து தட்டுக்களில் பிழிந்து வையுங்கள். அழகாக வட்டம் போல சுற்றுங்கள். இரண்டு தடவை மட்டும் சுற்றினால் சிறிதாக, பார்வைக்கும் உண்பதற்கும் இதமான அளவில் இடியப்பம் இருக்கும்.

தண்ணீர் கொதித்ததும் பிழிந்த இடியப்பங்களை அவித்து எடுங்கள். 5-7 நிமிடங்கள் வரை அவியவிட்டால் பதமாக இருக்கும்.

ஐ! இடியப்பம் தயார். சாப்பிடக் கூப்பிடுங்க.

குறிப்பு :- வெள்ளை அரிசி மாவாக இருந்தால் கண்ணுக்கு அழகாக இருக்கும். ஆனால் சிவத்த மாவில் செய்தால் தவிட்டுச் சத்தும் சேர்வதால் ஆரோக்கியத்திற்கு நல்லது.
அவித்த மைதா மாவிலும் செய்து கொள்ளலாம். கொதிநீரை சற்று ஆறவிட்டு மாவைக் குழைத்தால்தான் இடியப்பம் பதமாக வரும்.


மிக்ஸ்ட் வெஜிற்றபில் சொதி

தேவையான பொருட்கள்

முருங்கைக் காய் - 5,6 துண்டுகள்
கரட் - சின்னது - 1
உருளைக்கிழங்கு - 1
போஞ்சி - 5,6
தக்காளிப்பழம் - 2
சின்ன வெங்காயம் - 6,7 அல்லது பெரிய வெங்காயம் பாதி
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த் துருவல் - 2 கப்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு -
1/4 தேக்கரண்டி
தேசிச்சாறு -
1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி சிறிதளவு (விரும்பினால்)
உப்பு தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை -
சிறிதளவு

தாளிக்க விரும்பினால்

கடுகு -
1/4 தேக்கரண்டி
உழுத்தம் பருப்பு -
1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2
தேக்கரண்டி

செய்முறை

மரக்கறிகளை சிறிய துண்டங்களாக வெட்டி எடுங்கள்.
வெங்காயத்தையும் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள். மிளகாயை நீளவாட்டில் பிளந்து விடுங்கள்.

தேங்காயத் துருவலுடன் 1/2 கப் தண்ணீரர் விட்டு மிக்சியில் அடித்து கோப்பையில் வடித்து வையுங்கள். மீண்டும்
1/2 கப் தண்ணீர் விட்டு பால் எடுத்து, முதல் எடுத்த பாலுடன் கலந்து விடுங்கள். திரும்ப ஒரு கப் தண்ணீர் விட்டு பால் எடுத்து பால் கோப்பையில் கலந்துவிடுங்கள்.

அடுப்பில் வைக்கும் பாத்திரத்தில் தக்காளி தவிர்ந்த ஏனைய மரக்கறிகளைப் போட்டு
வெங்காயம், பச்சை மிளகாய், வெந்தயம், சோம்பு, கறிவேற்பிலை, உப்பு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அவியவிடுங்கள். முக்கால் பாகம் அவிந்ததும் தக்காளியைச் சேர்த்து விடங்கள். இரண்டு நிமிடம் அவிந்ததும் தேங்காயப் பாலை ஊற்றி கலக்கிவிடவும்.

பால் திரளாமல் இருக்க அரை தேக்கரண்டி எலுமிச்சம்சாறு சேர்த்து கொதிக்கிடுங்கள். அடிக்கடி கலக்கிக் கொள்ளுங்கள். கொதித்துவர இறக்கி பரிமாறும் கோப்பையில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

தாளிக்க விரும்பினால் தாளிதத்தை கலந்து விடுங்கள்.

கமகமக்கும் பால் சொதி தயார்

கிழங்கு தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள்

தக்காளி - 500 கிராம்
அவித்த உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் -2
பச்சைமிளகாய் - 1
தேங்காய்த் துருவல் - 1 1/2 கப்
மிளகாய்ப் பொடி- 1 தேக்கரண்டி
தனியாபபொடி - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் சிறிதளவு
உப்பு தேவைக்கு ஏற்ப

தாளிக்கத் தேவையானவை

தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சோம்பு -
1/4 தேக்கரண்டி
கறுவா 1 துண்டு
உள்ளி பேஸ்ட் சிறிதளவு
ரம்பை 1 துண்டு
கறிவேற்பிலை -
சிறிதளவு

செய்முறை


தக்காளி கிழங்கு இரண்டையும் துண்டங்களாக தனித்தனியே வெட்டி வையுங்கள். வெங்காயம் சிறியதாகவும், பச்சை மிளகாயை இரண்டு தண்டங்களாகவும் வெட்டிக் கொள்ளவும்.

தேங்காயத் துருவலுடன் 1/2 கப் தண்ணீரர் விட்டு மிக்சியில் அடித்து கோப்பையில் வடித்து வையுங்கள். மீண்டும் 1/2 கப் தண்ணீர் விட்டு பால் எடுத்து, முதல் எடுத்த பாலுடன் கலந்து விடுங்கள்.
திரும்ப ஒரு கப்
தண்ணீர் விட்டு பால் எடுத்து பிறிதொரு கோப்பையில் எடுத்து வையுங்கள்.

எண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருட்களை மேலே சொன்ன வரிசையில் தாளியுங்கள். இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, பச்சை மிளகாய், தக்காளித் துண்டங்கள் போட்டு ஒரு நிமிடம் கிளறுங்கள். உப்பு, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து கிழங்கையும் போட்டு தனியே எடுத்து வைத்த பால் விட்டு மூடி போட்டு 5-7 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். மூடியைத் திறந்து கெட்டிப்பால் ஊற்றி விடுங்கள்.

கொதித்துவர கிளறி இறக்கி பரிமாறும் கோப்பையில் விட்டுக் கொள்ளுங்கள்.
மிளகாயத்தூள் வாசம் கமழ குழம்பு அழைக்கும்.